Sunday, June 29, 2008

காணாமல் போதல்



அந்த சாலை வழியாகத்தான்
அவன் சென்றதாகச் சொன்னார்கள்.
அவன் ஏன் அந்த வழியாகச் செல்ல வேண்டும்.

அவன் தன் அலுவலகத்தலிருந்து
வீடு திருப்பிக் கொண்டிருந்திருக்கலாம்
தன் பிள்ளைகளை பவுத்திரமாக பாடசாலையில் விட்டுவிட்டு
வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கலாம்.
நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தனது தாய்க்கு
மருந்து வாங்கப் போயிருக்கலாம்
தன் சிறு குழந்தையின் அழுகை அடக்க
ஒரு வலூன் வாங்க போயிருக்கலாம்
பிரசவ வலியால் அவதிப்படும்தன் மனைவியின் நோக்கு
குழுசை வாங்கப் போயிருக்கலாம்
தன் நன்பனை பார்க்க போயிருக்கலாம்
அருகில் இருக்கும் நூலகத்திற்கு போயிருக்கலாம்
காலார நடந்திருக்கலாம்

இப்படி எத்தனையோ இருக்கிறது
அவன் அந்த சாலை வழிபோக
இதில் எது காரணமாக இருக்கலாம்
அவன் கானாமல் போனதற்கு.

‘’’

No comments: